இலங்கையின் வெதுப்பக தொழில்துறைக்கு தேவையான உயர்தரமான உள்ளடக்க பொருட்கள் மற்றும் மதுவம் எனப்படும் ஈஸ்ட் ஆகியவற்றை வழங்குவதில் முன்னணியில் திகழும் ஏபி மௌரி லங்கா[AB Mauri Lanka], 2025 ஆம் ஆண்டு அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி கொழும்பிலுள்ள ஷெரட்டன் கொழும்பு ஹோட்டலில் தனது முதன்மை நிகழ்வான “அவளை வலுப்படுத்தல் ” [“Empower Her”] எனும் நிகழ்வை நடத்தவுள்ளது. வெதுப்பகத்துறையில் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் அதே வேளையில் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் ஆதரிப்பதன் மூலம் பன்முகத்தன்மை(baking), உள்ளடக்கம் மற்றும் பெண்களை வலுப்படுத்தல் ஆகியவற்றுக்கான ஏபி மௌரி லங்காவின் அர்ப்பணிப்பை இந்த முயற்சியானது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்கு வெதுப்பக தொழில்சார் திறன்களை வழங்குவதன் மூலம், அவர்கள் பொருளாதாரத்தை வலுவூட்டவும் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நிறுவனம் நம்புகிறது.
இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ஏபி மௌரி லங்காவானது , வெதுப்பகத் துறையில் தொழில்வாய்ப்பைக் கட்டியெழுப்ப விரும்பும் பெண்களுக்கு விரிவான பயிற்சியை வழங்கி, அவளை வலுப்படுத்தல் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 20 பூரணமான புலமைப்பரிசில்களை வழங்கவுள்ளது. இத்திட்டம் பொருளாதார ரீதியாக சவாலான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கும், அரசாங்க நல உதவி திட்டமான அஸ்வசுமாவினை பெறுபவர்களுக்கும் , குறிப்பாக ஒற்றைப் பெற்றோர்கள் மற்றும் சொற்ப வருமானம் ஈட்டுபவர்களுக்கு அவர்களின் சொந்த தொழில்களை விருத்தி செய்து கொள்வதற்கும், தேவையான நிதியியல் சுதந்திரத்தை அடைவதற்கும் அவசியமான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் வெதுப்பகத் துறையில் முன்னணியில் திகழும் பெண் பிரமுகர் ஒருவரின் பெண்களுக்கு எழுச்சியூட்டும் விதத்தில் அமைந்த உரை ஒன்று இடம்பெறவுள்ளது, அவர் பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது தனிப்பட்ட பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார். அது மட்டுமன்றி தனிப்பட்ட ஆளுமை , பெண்களின் உரிமைகள், மன அழுத்தத்தை முகாமைத்துவம் செய்தல் மற்றும் மனநல ஆரோக்கியம் மற்றும் வெதுப்பகத்துறையில் வலுவடைதல் போன்ற முக்கிய தலைப்புகளில் திறமையும் ஆளுமையும் கொண்ட பெண்கள் குழுவினர் குழு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
இந்த நுண்ணறிவு கலந்த கலந்துரையாடலுக்கு மேலதிகமாக, பங்கேற்பாளர்கள் தொழில் வல்லுநர்களுடன்இணைந்து ஈடுபடவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் ஆதரவான சமூகத்திற்குள் அர்த்தமுள்ள இணைப்புகளை உருவாக்கவும் இந்த நிகழ்வானது தொடர்பாடலுக்கான வாய்ப்புகளை வழங்கும். புலமைப்பரிசில் பெறுபவர்களை கௌரவிக்கும் ஒரு சிறப்பு நிகழ்வுடன் அவர்களின் அதிகாரம் மற்றும் வெற்றியை நோக்கிய பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த விழாவானது முடிவடையும்,
பாலின சமத்துவம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் நீடித்த சமூக தாக்கத்தை உருவாக்க முற்படும்ஏபி மௌரி லங்காவின் பரந்த சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) மூலோபாயத்தின் முக்கிய அங்கமாக இந்த முயற்சியானது திகழ்கிறது . திறன் மேம்பாட்டில் முதலீடு செய்வதன் மூலமும், வெதுப்பகத் துறையில் பெண்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும், ஏபி மௌரி லங்காவானது மேலும் உள்ளடக்கிய மற்றும் சமமான எதிர்காலத்தை வளர்ப்பதற்கு உறுதிபூண்டுள்ளது.\
”அவளை வலுப்படுத்தல் ”[Empower Her] புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 20, 2025 வரைபெற்றுக்கொள்ள முடிவதுடன் நேர்காணல்கள் மற்றும் திறன் தேர்வுகள் பிப்ரவரி 22, இல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உதவித்தொகை பெறுபவர்களின் இறுதி பட்டியல் பிப்ரவரி 24, அன்று அறிவிக்கப்படும்.
ஊடக விசாரணைகளுக்கு, தொடர்பு கொள்ளவும்:
அகீலா கரீம் (baking)
- +94 760 879 297
ஏபி மௌரி லங்கா பற்றி: ஏபி மௌரி லங்கா உணவு மற்றும் வெதுப்பகத் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்வதுடன் நிலைபெறுதகு தன்மை மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்புக்கான அதன் அர்ப்பணிப்புகாக புகழ் பெற்றது. நிறுவனத்தின் ESG மூலோபாயமானது சமூகங்களில் , குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு துறைகளில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அதன் புதுமையான முயற்சிகள் மூலம், ஏபி மௌரி லங்காவானது தொடர்ந்து இலங்கை முழுவதும் தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் மத்தியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.