தீபாவளி என்பது ஒளியின் பண்டிகை மட்டுமல்ல; அது குடும்பம், பாரம்பரியம், மற்றும் சுவையின் பண்டிகையும். இனிப்புகள், பலகாரங்கள் மட்டுமல்லாமல், முழுமையான சாப்பாடு தமிழர் சமையலின் நுணுக்கத்தையும் கலாச்சார அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த கட்டுரையில், தீபாவளி நாளில் பரிமாறப்படும் பாரம்பரிய “முதன்மை உணவுகள்” பற்றியும், அவற்றின் சுருக்கமான செய்முறைகளும் பகிரப்படுகின்றன.
- பாசுமதி அரிசி சாதம்
தீபாவளி சாப்பாட்டின் அடிப்படை வெறும் வெந்த அரிசி அல்ல; நெய் ஊற்றிய, வாசனைமிக்க, பரிமாற்றத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படும் சாதம்.
செய்முறை:
பாசுமதி அரிசியை கழுவி, தண்ணீரில் வேக வைத்து, சிறிது நெய் சேர்த்து கிளறவும். சாம்பார், கூட்டு, மற்றும் தயிருடன் பரிமாறப்படும்.
குறிப்பு – பாசுமதி அரிசி தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. பச்சரிசி அல்லது சம்பா அரிசி கூட பயன்படுத்தி சுவையான நெய் மணக்கும் சாதம் தயாரித்து வாழை இலையில் அனைத்து உணவுகளுடனும் சேர்த்து பரிமாற முடியும்.

- சாம்பார்
பருப்பு, காய்கறிகள், மற்றும் சாம்பார் பொடி கொண்டு தயாரிக்கப்படும். இது சுவை மட்டுமல்ல, ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். துவரம்பருப்பை வேக வைத்து, வெங்காயம், தக்காளி, மற்றும் காய்கறிகளை வதக்கி, புளி நீர், சாம்பார் பொடி சேர்த்து கிழித்து, பருப்புடன் கலந்து கொதிக்க விடவும்.
தேவையானவை:
- துவரம் பருப்பு – ½ கப்
- புளி – 1 tbsp
- முருங்கைக்காய், கேரட், சின்ன வெங்காயம்
- சாம்பார் தூள் – 1 tbsp
- கடுகு, கருவேப்பிலை, மிளகாய்
- பெருங்காயம், மஞ்சள், உப்பு
செய்முறை:
- பருப்பை மஞ்சளுடன் வேக வைக்கவும்.
- புளி நீரில் காய்கறிகளை சாம்பார் தூளுடன் வேக வைக்கவும்.
- பருப்பை சேர்த்து simmer செய்யவும்.
- கடுகு, மிளகாய், கருவேப்பிலை temper செய்து சேர்க்கவும்.
- கொத்தமல்லி இலை சேர்த்து garnish செய்யவும்.

- கூட்டு
பாசிப்பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து தயாரிக்கப்படும் மென்மையான பக்க உணவு.
பாசிப்பருப்பை வேக வைத்து, பூசணிக்காய் அல்லது வெண்டைக்காய் சேர்த்து, தேங்காய் விழுது, மிளகாய், சீரகம், மற்றும் சிறிது மிளகு சேர்த்து கிழித்து, கடுகு தாளித்து பரிமாறவும்.
தேவையானவை:
- பூசணிக்காய் – சிறிய துண்டுகளாக
- பாசி பருப்பு – ½ கப்
- தேங்காய் துருவல் – ¼ கப்
- சீரகம் – 1 tsp
- பச்சை மிளகாய் – 1
- கடுகு, கருவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு
செய்முறை:
- பாசி பருப்பை மஞ்சள் தூளுடன் வேக வைக்கவும்.
- பூசணிக்காயை சேர்த்து மென்மையாக வேக வைக்கவும்.
- தேங்காய் + சீரகம் + பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும்.
- கடுகு, கருவேப்பிலை temper செய்து சேர்க்கவும்.
- சாதத்துடன் பரிமாறவும்.

- வத்தக்குழம்பு
புளி, வத்தல், மற்றும் மிளகாய் கொண்டு தயாரிக்கப்படும், தீவிர சுவை கொண்ட குழம்பு வகை. புளி நீரை காய்ச்சி, வத்தல், மிளகாய், மஞ்சள், உப்பு, மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும். கடுகு, வெங்காயம், மற்றும் கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
தேவையானவை:
- புளி – சிறிய எலுமிச்சை அளவு
- சுண்டக்காய் வத்தல் – 2 tbsp
- சாம்பார் தூள் – 1 tbsp
- கடுகு, வெந்தயம், கருவேப்பிலை
- நல்லெண்ணெய் – 2 tbsp
- உப்பு, மஞ்சள், வெல்லம் (optional)
செய்முறை:
- வத்தலை நல்லெண்ணெயில் வறுக்கவும்.
- கடுகு, வெந்தயம், கருவேப்பிலை temper செய்யவும்.
- சாம்பார் தூளை சேர்த்து வதக்கவும்.
- புளி நீரை ஊற்றி, உப்பு, மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும்.
- வத்தல் + வெல்லம் சேர்த்து 5 mins simmer செய்யவும்.

- பொரியல்
வறுத்த காய்கறி வகை. உருளைக்கிழங்கு, பீர்க்கங்காய், அல்லது கேரட் போன்றவை பயன்படுத்தப்படும். காய்கறிகளை வெட்டி, எண்ணெயில் கடுகு, உளுந்து, மற்றும் கருவேப்பிலை தாளித்து வதக்கி, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வறுக்கவும்.
சாதம் பக்கத்துக்கு crunchy, colorful side.
தேவையானவை:
- கேரட், பீன்ஸ் – நறுக்கியது
- தேங்காய் துருவல் – 2 tbsp
- கடுகு, கருவேப்பிலை, பச்சை மிளகாய்
- உப்பு, மஞ்சள், எண்ணெய்
செய்முறை:
- காய்கறிகளை steam செய்யவும்.
- கடுகு, மிளகாய், கருவேப்பிலை temper செய்யவும்.
- காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
- தேங்காய் துருவல் சேர்த்து toss செய்யவும்.

- தயிர்
வீட்டில் தயார் செய்யப்படும் பசுமை தயிர், சாப்பாட்டின் இறுதி கட்டமாக பரிமாறப்படும்.
செய்முறை:
பசுமை பாலை காய்ச்சி, குளிர்ந்ததும் தயிர் கலந்துவைத்து, 6–8 மணி நேரம் வைத்தால் தயிர் தயார்.
குறிப்பு – தயிர் சாப்பிடுவதால் ஜீரணம், நோய் எதிர்ப்பு மற்றும் மன நலத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். இது ஒரு இயற்கையான புரோபயாடிக் உணவாகவும், பாரம்பரியத்தில் தினசரி உணவின் முக்கிய பகுதியாகவும் கருதப்படுகிறது.

பாரம்பரியத்தின் வாசனை: தீபாவளி சாப்பாடு
இந்த உணவுகள், ஒவ்வொன்றும் தனித்துவம் கொண்டவை. சுவை, வாசனை, மற்றும் பாரம்பரியத்தின் இணைப்பு. தீபாவளி அன்று, இந்த வகையான முழு சாப்பாடு, குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் ஒரு அழகான வழியாகும். சிநேகிதி வாசகர்களுக்கான இந்த கட்டுரை, சமையலின் வழியாக பாரம்பரியத்தை மீட்டெடுக்க ஒரு அழகான அழைப்பு.
அந்த சாப்பாட்டுத் தட்டில் ஒரு சிறு இனிப்பு, ஒரு சிறு வடை, ஒரு சிறு பாயாசம் இருந்தால்தான் தீபாவளி முழுமையாகிறது.
தீபாவளி விருந்தில், சாதம், சாம்பார், கூட்டு, வத்தக் குழம்பு, தயிர், பொரியல்.. all form the soulful base. ஆனால் அதன் மேல் பொங்கல், வடை, பாயாசம் போன்ற உணவுகள் ஒரு கலைமிகு முடிவை தருகின்றன. வெண்மையான பொங்கல், பருப்பு வடை, சத்தான பாயாசம்; இவை எல்லாம் பாரம்பரியத்தின் சுவைச்சுவடுகள். சில வீடுகளில் அதிரசம், மைசூர் பாகு, கேசரி, பனீர் போன்றவை கூட சேர்க்கப்படுகின்றன.
தீபாவளி என்பது ஒரு உணவுப் பயணம். ஒவ்வொரு சுவையும், ஒரு நினைவையும், ஒரு உறவையும், ஒரு புன்னகையையும் மீட்டெடுக்கிறது. இந்த வருடம், உங்கள் தட்டில் புதிய சுவையும், பழைய பாசமும் சேர்த்துப் பாருங்கள்.
இந்த தீபாவளி பண்டிகைக் காலத்தில் இந்த முதன்மை உணவுடன் இனிப்பும் பானமும் கண்டிப்பாக தேவைப்படும். அடுத்த பதிவில் தீபாவளி பானம் தொடர்பான ஒரு குறிப்புடன் சிநேகிதியை எதிர்பார்த்திருங்கள்.